ஆம்னி வேன் திடீர் தீ விபத்து

by Staff / 13-02-2023 05:30:31pm
ஆம்னி வேன் திடீர் தீ விபத்து

கரூரிலிருந்து காக்காவாடி செல்வதற்காக நாமக்கல் மாவட்டம், மோகனூரை சேர்ந்த கோபிநாத் என்பவர், கரூர் வையாபுரி நகர் பஸ் ஸ்டாப் அருகே தனது காரை நிறுத்திவிட்டு கடைக்கு சென்ற பொழுது ஆம்னி கார் திடீரென்று தீ பற்றி எரிய தொடங்கியது.தகவல் அறிந்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த கரூர் தீயணைப்பு படையினர் விரைவாக சென்று தீயை அணைத்தனர். சுமார் ஒரு மணி நேரமாக போராடி ஆம்னி வேனை முற்றிலும் பற்றிய நிலையில் இருந்த தீ அணைக்கப்பட்டது.இதுகுறித்து கரூர் நகர காவல் துறையில் விசாரணை நடத்தி வருகின்றனர். மாநகரில் பரபரப்பான சாலையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் திடீரென்று கார் தீ பற்றியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Tags :

Share via