நாய் மீது திருட்டு வழக்கு
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. நகரின் பிஜிஐ காவல் நிலையத்தில் நாய் திருடியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு நபர் ஆன்லைன் மூலம் நாய் மீது புகார் அளித்ததை அடுத்து, போலீசார் நாய் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை உடனடியாக தொடங்கியது. கல்லி மேற்கு பகுதியைச் சேர்ந்த சந்தீப் சிங் என்ற நபர், நாய் குறித்து புகார் அளித்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். எனினும், புகாருக்கான காரணங்கள் என்ன என்று தெரியவில்லை.
Tags :