அம்பேத்கர் பிறந்தநாள் ஊர்வலத்தில் கலவரம்... போலீஸ் ஸ்டேசன் மீது கல்வீச்சு
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று இரு பகுதியை சேர்ந்தவர்கள் சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில் தகராறு ஏற்பட்டதையடுத்து போலீசார், இருதரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பிய நிலையில், இரவில் வடகரை போலீஸ் நிலையம் மீது சிலர் கற்களை வீசி கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் இன்ஸ்பெக்டரின் ஜீப் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. மேலும், அரசு பஸ், ஆம்புலன்ஸ் ஆகியவரையும் சேதப்படுத்தப்பட்டன. இச்சம்பவத்தில் சிலரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவியது.
Tags :