8 லாரிகளுக்கு  2 லட்சத்து 36 ஆயிரம் அபராதம்.

by Editor / 16-04-2023 07:00:05pm
8 லாரிகளுக்கு  2 லட்சத்து 36 ஆயிரம் அபராதம்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பழைய பஸ் நிலையம், புலியூர் ,குறிச்சி, ஆகிய இடங்களில்தக்கலை ஆய்வாளர் நெப்போலியன் தலைமையில் வாகன தணிக்கை நடத்தப்பட்டது.அப்போது அந்த வழியாக கேரள மாநிலத்திற்கு ஜல்லி எம் -சான்ட் போன்றவற்றை ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர்  லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர்.இந்த சோதனையில் 8 லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக பாரம் ஏற்றி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அதிக பாரம் ஏற்றிய அளவை பொறுத்து, லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.அந்த வகையில் எட்டு லாரிகளுக்கு மொத்தமாக 2 லட்சத்து 36 ஆயிரத்து 540 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு பின்னர் லாரிகள் விடுவிக்கப்பட்டன.

 

Tags :

Share via