ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

by Staff / 20-04-2023 04:58:19pm
ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

பிரதமர் மோடிக்கு எதிரான அவதூறு வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை கோரிய ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனைக்கு தடை கோரிய அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து நீதிமன்றத்தால் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், நாடாளுமன்ற எம்.பி. பதவியில் இருந்து ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்ட நிலையில், முன்னதாக ஜாமீன் பெற்றிருந்தார்.

 

Tags :

Share via