மீதமுள்ளவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி

by Staff / 26-09-2022 05:21:27pm
மீதமுள்ளவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, தற்போது வரை 5 லட்சத்து 22 ஆயிரத்து 514 விவசாயிகளுக்கு, 3 ஆயிரத்து 969 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 14 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 5 சவரனுக்கு உட்பட்டு கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்ற சுமார் ஒரு லட்சம் பேர் உறுதிமொழி பத்திரம் கொடுத்தால் அவர்களுக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் . சென்னை அண்ணாநகர், திருமங்கலம், திருநகர் உள்ளிட்ட பத்து நியாயவிலை கடைகள், கூட்டுறவு மருந்தகங்களில் கூகுள் பே மூலம் பணம் செலுத்தி பொருட்களை பெரும் நடவடிக்கைகள் தொடங்கபட்டுள்ளது என்று கூறினார்.

 

Tags :

Share via