5 சிறுமியருக்கு பாலியல் தொல்லை விழுப்புரம் அருகே 4 சிறுவர்கள் கைது

by Staff / 03-05-2023 04:43:51pm
5 சிறுமியருக்கு பாலியல் தொல்லை விழுப்புரம் அருகே 4 சிறுவர்கள் கைது

விழுப்புரம் அருகே, மொபைல் போனில் ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்களை காண்பித்து, ஐந்து சிறுமியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நான்கு சிறுவர்களை, போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர். விழுப்புரம் அருகே கிராமப்புற பகுதியில் உள்ள ஒரு அரசு துவக்கப் பள்ளியில், வட மாநிலத்தைச் சேர்ந்த, 6 வயது சிறுமி இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். துன்புறுத்தல்சில தினங்களுக்கு முன் பள்ளி சென்ற அந்த சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். ஆசிரியர் விசாரித்ததில், சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானது தெரிய வந்தது. விழுப்புரம் மாவட்ட சமூக நலத்துறை குழந்தைகள் நல அலுவலருக்கு, ஆசிரியர் தகவல் தெரிவித்தார். குழந்தைகள் நல அலுவலர் சிறுமியை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். சிறுமியை பரிசோதித்ததில், அவர் கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரிந்தது. இது குறித்து, குழந்தைகள் நல அலுவலர், கடந்த 28ம் தேதி விழுப்புரம் மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
ஒப்படைப்புவிசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த, 14 - 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. நான்கு சிறுவர்களும் தங்கள் மொபைல் போனில் ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்களை காண்பித்து, வட மாநில சிறுமி உட்பட ஐந்து சிறுமியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, நான்கு சிறுவர்களையும் போலீசார் கைது செய்து, மாவட்ட இளஞ்சிறார் மன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலுார் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர். மறைத்த காவல் துறைஇந்த கொடூர சம்பவம் குறித்து, முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம் கள ஆய்வில் ஈடுபட்டபோது போலீசாருக்கு தெரிய வந்தது. அப்போது, பாலியல் புகார் வெளியே தெரிந்தால் பிரச்னை பெரிதாகும் என்பதால், முதல்வர் ஆய்வை முடித்துச் சென்ற பின், மறுநாள் ரகசியமாக வழக்கு பதிந்து, குற்றவாளிகளை, 29ம் தேதி போலீசார்கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பான தகவலை, காவல் நிலையத்தில் தினசரி பதிவு செய்யப்படும் குற்றச்சம்பவங்கள் தொடர்பான டி. எஸ். ஆர். பதிவேட்டிலும் பதிவு செய்யவில்லை. இதன் வாயிலாக சம்பவத்தை மறைக்க போலீசார் முயற்சி செய்து உள்ளனர். அப்பகுதி மக்கள் தெரிவித்த தகவலில் சம்பவம் அம்பலமானது. விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூரில் கடந்த பிப்ரவரியில், பள்ளி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தொடர்ந்து, தற்போது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

Tags :

Share via