சிறுமிக்கு பாலியல் தொல்லை தாயின் கள்ளக்காதலன் மற்றும் பாட்டி மீது வழக்கு

by Staff / 23-09-2022 01:15:30pm
சிறுமிக்கு பாலியல் தொல்லை தாயின் கள்ளக்காதலன் மற்றும் பாட்டி மீது வழக்கு


கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அடுத்த பத்து காணியை சேர்ந்தவர் ஷஜூலா இவருக்கும் கேரளா மாநிலம் அம்பூரியை சேர்ந்த முகம்மதுசுதீர் என்பவருக்கும் திருமணம் நடந்தள்து. இதன் மூலம் இவர்களுக்கு 15- வயதில் ஒரு பெண் குழந்தையும் 14 , 13 - வயதில் இரண்டு ஆண் குழந்தையும் உண்டு இந்நிலையில் கடந்த 10- ஆண்டுகளுக்கு முன்பு முகம்மது சுதீர் -ஷஜூலா-வை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதனை அடுத்து அவர் கேரளா மாநிலம் மலப்புறத்தை சேர்ந்த டிஜேஷ் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து உள்ளார். இந்நிலையில் ஷஜூலா -மூன்றாவதாக ஷஜூலா மற்றொருவருடன் ஓடிவிட்டார். இதையடுத்து மூன்று குழந்தைகளும் தனது பாட்டியான ஷெரீபா(58) , ஷஜூலா-வின் இரண்டாது சேர்ந்து வாழ்ந்த டிஜேஷ் ஆகியோர் பராமரிப்பில் குழந்தைகள் வளர்ந்து வந்தனர். இந்நிலையில் டிஜேஷ் 15-சிறுமியிடம் செக்ஸ் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை சிறுமி தனது பாட்டியிடம் கூறிய பின்பும் அவரது பாட்டியார் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து இச் சம்பவங்களை பார்த்துக்கொண்டிருந்த அக்கம்பக்கத்தினர். மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து குழந்தைகளின் பாட்டி ஷெரிபா மற்றும் டிஜேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via