மொபைல் போன் வெடித்துச் சிதறியதில் 8 வயது சிறுமி பரிதாப பலி

by Editor / 25-04-2023 11:54:07am
மொபைல் போன் வெடித்துச் சிதறியதில் 8 வயது சிறுமி பரிதாப பலி

கேரள மாநிலம் திருச்சூர், திருவில்வாமலையில் நடந்த சோகமான சம்பவத்தில், பட்டிப்பரம்பு பகுதியைச் சேர்ந்த ஆதித்யஸ்ரீ என்ற 8 வயது சிறுமி, கேம் விளையாடிக் கொண்டிருந்த போது மொபைல் போன் வெடித்துச் சிதறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் நடந்துள்ளது. ஆதித்யஸ்ரீ திருவில்வமலையில் உள்ள கிறிஸ்ட் நியூ லைஃப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இதுகுறித்து பழையனூர் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை தடயவியல் ஆய்வு நடைபெறவுள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via