முறப்பநாடு வி.ஏ.ஓ.வெட்டிக் கொலை ஒருவர் கைது, எஸ்பி சம்பவ இடத்தில் நேரில் விசாரணை..

by Editor / 25-04-2023 06:05:45pm
 முறப்பநாடு வி.ஏ.ஓ.வெட்டிக் கொலை  ஒருவர் கைது, எஸ்பி சம்பவ இடத்தில் நேரில் விசாரணை..

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராமத்தில கிராம நிர்வாக அதிகாரியாக (விஏஓ) லூர்து   பிரான்சிஸ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் அந்த பகுதியில் ஆய்வுக்கு செல்லும்போது தாமிரபரணி ஆற்றில் இருந்து ராமசுப்பு என்பவர் இருசக்கர வாகனத்தில் ஆற்று மணலை கடத்திச் சென்றுள்ளார். அப்போது கிராம நிர்வாக அதிகாரியை பார்த்தவுடன் ஆற்று மணலை போட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார்.இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சிஸ் முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.இந்த நிலையில் 25.04.23 அன்று கிராம நிர்வாக அலுவலகத்தில் லூர்து பிரான்சிஸ் பணியிலிருக்கும்போது சம்பவ இடத்துக்கு வந்த இரண்டு பேர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். படுகாயம் அடைந்த கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்சி்ஸை அருகில் உள்ளவர்கள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் நிகழ்விடத்திற்கு நேரில் சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தியுள்ளார்.இதற்கிடையே நெல்லை ஹைக்கிரவுன்ட் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விஏஓ லூர்து பிரான்சிஸ் உயிரிழந்தார். இது குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆற்று மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டதால் மர்ம நபர்கள் அவரை வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக கலியாவூரைச்  சேர்ந்த ராம சுப்பு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்ரை ஓருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via