பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: தமிழிசை

by Staff / 30-04-2023 01:47:31pm
பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: தமிழிசை

பாவேந்தர் பாரதிதாசனின் 133-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரினாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் அவர் செய்தியாளர் களிடம் பாரதிதாசனின் 133-வது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் அவர் எழுதியதுதான் என்பது எங்களுக்கு கூடுதல் பெருமை. புதுவையோடு ஒன்றியவர்கள்தான் பாரதியாரும், பாரதிதாசனும். பிரதமர் மோடியின் 'மனதின் குரல்' 100-வதுநிகழ்ச்சியை சிறப்பாக கொண்டாடத் திட்டமிட்டுள்ளோம்.'மனதின் குரல்' நிகழ்ச்சியை இளைஞர்கள் கேட்க வேண்டும். இது அரசியல் கலவாத சமுதாய நிகழ்ச்சி. புதுச்சேரியில் பெண்களுக்கு பணியில் 2 மணி நேரம் குறைக்கப்பட்டதற்கு எதிர்கட்சிகளிடம் இருந்து வரவேற்பு இருக்காது என்பது தெரியும். அதனைப் பெண் அடிமை என்கிறார்கள். நிச்சயம் அப்படி கிடையாது. பெண்களிடம் இது வரவேற்பை பெற்றுள்ளது.கர்நாடக மாநிலத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும். டெல்லியில் விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து நடத்தி வரும் போராட்டம் குறித்த தகவல்களை சேகரித்துவிட்டு பிறகு கருத்து சொல்கிறேன். குறை சொல்வதைவிட பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via