உக்ரைனை ஆக்கிரமித்தால் ரஷியா பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

by Admin / 22-01-2022 12:30:59pm
உக்ரைனை ஆக்கிரமித்தால் ரஷியா பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷியா-உக்ரைன் இடையிலான மோதல் கடந்த சில மாதங்களாக வலுத்து வருகிறது. சுமார் 1 லட்சம் படைவீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷியா நிறுத்தியுள்ளது. 

இதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையே போர் சூழல் உருவாகி இருக்கிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளன.
 
குறிப்பாக அமெரிக்கா இந்த விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், உக்ரைனை ஆக்கிரமித்தால் ரஷியா பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஷிய அதிபர் புதினிடம் தனது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்துள்ளதாகவும், ரஷிய படைகள் உக்ரைன் எல்லையை தாண்டி சென்றால் அது படையெடுப்பாகவே கருத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


 
 

 

Tags :

Share via