1¼ கிலோ கஞ்சா பறிமுதல்; 3 வாலிபர்கள் கைது...

by Staff / 01-05-2023 05:35:56pm
1¼ கிலோ கஞ்சா பறிமுதல்; 3 வாலிபர்கள் கைது...

புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரெயில் நிலையம் அருகே கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த திருக்கோகர்ணத்தை சேர்ந்த வினோத் (28), புதுக்கோட்டையை சேர்ந்த சிவா (25) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ. 3 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் மற்றொரு சம்பவத்தில் புதுக்கோட்டை டவுன் போலீசார் சந்தைபேட்டை அருகே கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த சுதாகர் (21) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via