இரசாயன ஆலையில் தீ விபத்து: ஐந்து பேர் பலி

by Staff / 02-05-2023 11:25:58am
இரசாயன ஆலையில் தீ விபத்து: ஐந்து பேர் பலி

சீனாவில் இரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஐந்து பேர் பலியாகினர். ஒருவர் காயமடைந்தார். விபத்தில் சிக்கிய ஒருவரை காணவில்லை. சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள லியோசெங்கில் உள்ள கெமிக்கல் ஹைட்ரஜன் பெராக்சைடு உற்பத்தி ஆலையில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. அதிகாரிகள் குழுவின் விசாரணை நடந்து வருவதாக குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை மேலும் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், திங்கள்கிழமை பிற்பகலில் தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சைனா டெய்லி தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via