விபத்தான லாரியிலிருந்த பீர் பாட்டில்களை அள்ளிச்சென்ற குடிமகன்கள். 

by Editor / 03-05-2023 09:18:49am
விபத்தான லாரியிலிருந்த பீர் பாட்டில்களை அள்ளிச்சென்ற குடிமகன்கள். 

கிருஷ்ணகிரி அடுத்த பந்தாரப்பள்ளி மேம்பாலம் அருகே மது பானங்கள் ஏற்றி சென்ற லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் லாரியிலிருந்த மதுபானம் அட்டைப்பெட்டிகள் சாலையில் விழுந்தன.இந்த விபத்தினை வேடிக்கை பார்க்க வந்த ஏராளமானவர்கள் லாரியிலிருந்து கீழே விழுந்த அட்டைப்பெட்டிகளில் இருந்தும்,லாரியில் இருந்தும்  பல பீர் பாட்டில்கள் உடைந்து இருந்தாலும் உடையாத பாட்டில்களை அங்கு திரண்ட குடிமகன்கள் மனசாட்சியே இல்லாமல் அள்ளிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பிய ஓட்டுனர் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து பீர் பாட்டிலை அள்ளிச் சென்ற பொது மக்களை தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினார்.

 

Tags :

Share via