தமிழகத்தில் 1.50 இலட்சம் பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்.
இன்று நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழ் உள்பட 13 மொழிகளில் நடைபெறும் தேர்வை மொத்தம் 20 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 1.50 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். நீட் விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்துள்ள பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்றும், ஏற்கத்தக்க அடையாள அட்டையுடன் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல வேண்டும். நுழைவுச்சீட்டு, அடையாள சான்று தவிர்த்து வேறு எந்த தாள்களையும், தேர்வு அறைக்கு எடுத்து செல்லக்கூடாது.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்வையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Tags :