கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு ..... 203 பேர் பலி
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 203 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது பல கிராமங்களில் கடும் சேதத்தை விளைவித்தது. மேலும், இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 203 பேர் உயிரிழந்துள்ளனர். இது மட்டுமல்லாது 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Tags :