ஹோட்டல் அறையில் இறந்து கிடந்த கொரிய பாப் பாடகி
தென் கொரிய பாப் பாடகி ஹை சூ (29) ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹோட்டல் அறையில் தற்கொலைக் கடிதம் கண்டெடுக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஹோட்டல் அறையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தென் கொரியாவில் மே 20ஆம் தேதி ஹை சூவின் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கிடையில், அவரது மறைவு செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதேவேளை, ஹோட்டல் அறையில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தின் விபரங்களை போலீசார் இரகசியமாக வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :