மனைவியை வீட்டிற்குள் அடைத்து சுவர் கட்டிய சைக்கோ கணவன்

by Staff / 16-05-2022 02:15:29pm
 மனைவியை வீட்டிற்குள் அடைத்து சுவர் கட்டிய சைக்கோ கணவன்

200க்கும் மேற்பட்ட இனிப்பு கடைகளில் வைத்து இருக்கும் பிரபல தொழிலதிபரின் மகன் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை வீட்டிற்குள் அடைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் புல்லா ரெட்டி ஸ்வீட் என்ற பெயரில் 200க்கும் மேற்பட்ட மிட்டாய் கடை நடத்தி வருபவர் மகன் ஏக்நாத் ரெட்டிக்கும் பெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபரின் மகள் பிரியாவுக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது மாப்பிள்ளைக்கு 75 லட்ச ரூபாய் ரொக்கப் பணமும் 19.5 லட்சம் மதிப்பில் தங்க வெள்ளி நகைகள் 35 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ் அதுதவிர நாத்தனார் சீதனம் என்ற பெயரில் தனியாகவும் வரதட்சனை பட்டியலிட்டுள்ளது ஏக்நாத் ரெட்டி காக தந்தை ராகவா ரெட்டி அவரது தாய் பார்வதி சகோதரி ஸ்ரீவித்யா ஆகியோர் வரதட்சணையாக மொத்தம் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை பேரம் பேசி பெற்றதாகக் கூறப்படுகின்றது. போதாதென்று ஹைதராபாத்தில் வணிக வளாகம் ஒன்று கூடுதல் வரதட்சணையாக கேட்டுள்ளார். அது மட்டும் பிரியாவின் பெற்றோர் வாங்கி கொடுக்கவில்லை இது தொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது 7 வயதில் மகள் உள்ள நிலையில் ஏக்நாத் ரெட்டி கூடுதல் வரதட்சணை கேட்டு தனது மனைவியை விவாகரத்து செய்ய முயன்றுள்ளார்.2014 ஆம் ஆண்டு அதற்கான நடவடிக்கைகளை ஏக்நாத் ரெட்டி மேற்கொண்ட நிலையில் அவரது விவகாரத்து வழக்கு தள்ளுபடியானது மனைவியுடன் ஒரே வீட்டில் வசிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஏக்நாத் திரட்டி கடந்த 10ஆம் தேதி வீட்டின் கீழே பகுதியில் தனது மனைவி மற்றும் மகள் தங்கியிருக்கும் அறையில் மின்சாரத்தையும் தண்ணீர் இணைப்பை துண்டித்துளளர்  இருவரையும் சிறை வைக்கும் எண்ணத்தில் அவர்களது அறையில் இருந்து வெளியே விடாமல் தடுப்பு சுவர் ஒன்றை அமைத்த இயக்குனர் திரட்டி மனைவியும் மகளும் கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் வீட்டிற்குள் சுவர் கட்டி சிறை வைக்கப்பட்டுள்ள தகவலை தனது பெற்றோருக்கு தெரிவித்துள்ளார் பிரகன்யா இதையடுத்து போலீசாரின் வீட்டிற்கு விரைந்து பெற்றோர் அந்த தடுப்பு சுவரை உடைத்து பிரகன்யாவையும் அவரது ஏழு வயது மகளையும் விட்டனர் இந்த சம்பவம் குறித்து குடும்ப வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் வீட்டில் இருந்து தப்பியோடிய தேடிவருகின்றனர் வீட்டிற்கு வந்த மருமகளை இனிமையாக கவனித்துக்கொள்ள தவறியதால் இனிப்பு வியாபாரி குடும்பத்தின் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பாய்ந்துள்ளது.

 

Tags :

Share via