மதுக்கடைகளால் தொடர்ந்து உயிர் பலி - அண்ணாமலை

by Staff / 05-06-2023 02:41:08pm
மதுக்கடைகளால் தொடர்ந்து உயிர் பலி - அண்ணாமலை

தமிழக அரசு மதுக்கடைகளில் விற்கப்படும் மதுவால் தொடர்ந்து ஏற்படும் உயிர் பலிகளை தடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து பேசிய அவர், “மது பாட்டிலுக்குள் இறந்த நிலையில் பல்லி, பாசி மிதப்பதாக செய்தி வருவது அதிர்ச்சியளிக்கிறது. மதுரையில் டாஸ்மாக் மது குடித்த ஒருவர் மயங்கி விழுந்து பலியாகியுள்ளார். மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

 

Tags :

Share via