கேஸ் ஏற்றிய போது ஆம்னி வேன் தீப்பிடித்தது

by Staff / 16-05-2023 02:02:50pm
கேஸ் ஏற்றிய போது ஆம்னி வேன் தீப்பிடித்தது

பவானி அருகே மூன்று ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி, 60; விசைத்தறி நெசவு தொழிலாளி. நேற்று, விசைத்தறியில் நெய்த துண்டுகளை ஆம்னி வேனில் ஏற்றிக்கொண்டு விற்பனை செய்ய அந்தியூர் வந்தார்.விற்பனையை முடித்துக் கொண்டு, மூன்று ரோடு செல்வதற்காக, பட்லுார் நால்ரோடு வழியாக ஒலகடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, கேஸ் தீர்ந்து ஆம்னி வேன் நின்றது.இந்த நிலையில், வீட்டுக்கு பயன்படுத்தக்கூடிய சிலிண்டரை எடுத்து வந்து, கார் பேட்டரி உதவியுடன், கேஸை நிரம்பிக் கொண்டிருந்தார்.அப்போது, எதிர்பாராத விதமாக ஆம்னி வேன் தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிய துவங்கியது. தீ விபத்து குறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனர். இதில், ஆம்னி வேன் முற்றிலும் தீக்கிரையாகி சேதமடைந்தது. தீ விபத்தில் ரங்கசாமிக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. சட்ட விரோதமாக கேஸ் நிரம்பியபோது ஏற்பட்ட விபத்து குறித்து, வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via