பெண் மீது தலைவர் தாக்குதல்

by Staff / 18-05-2023 11:34:48am
பெண் மீது  தலைவர் தாக்குதல்

ஆந்திர மாநிலம் கர்னூலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ரகுநாத ரெட்டிக்கும், அலகட்டா பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், வயலில் நின்று கொண்டு இருந்த பெண் மீது ரகுநாத ரெட்டி தாக்குதல் நடத்தினார். அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்து எட்டி உதைத்து தள்ளியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கட்சி தலைமை மீதும் அதிருப்தி எழுந்துள்ளது.

 

Tags :

Share via