56 வயதில் கனவை நனவாக்கிய பெண்

by Staff / 21-05-2023 11:52:50am
56 வயதில் கனவை நனவாக்கிய பெண்

நாமக்கல் மாவட்டத்தில் 56 வயது பெண் ஒருவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று சாதிக்க வயது ஒரு தடை இல்லை என நிரூபித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சேர்ந்த தமிழ்மணி என்பவரது மனைவி தனம் இருவரும் கடந்த 30 ஆண்டுக்கு மேலாக பாத்திரக்கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், 8-ம் வகுப்பு முடித்தவுடன் திருணம் நடந்ததால் அவரால் 10ம் வகுப்பு பயில வேண்டும் என்ற கனவு தடைபட்டது. இதனால், 3 மாதம் கடின ஊழைப்புடன் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி அதில் 247 மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து பேசிய அவர், யோகா ஆசிரியர் பயிற்சி பெற விரும்புவதாக தெரிவித்தார்.

 

Tags :

Share via