டிவி பார்ப்பதில் சண்டை.. தந்தை, மகள் கிணற்றில் குதித்து தற்கொலை

by Staff / 25-05-2023 11:20:20am
டிவி பார்ப்பதில் சண்டை.. தந்தை, மகள் கிணற்றில் குதித்து தற்கொலை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த பைத்தூர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகள் மேகலா 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் மேகலாவிற்கும் அவருடைய தம்பி பிரியனுக்கும் டிவி பார்ப்பதில் சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் வீட்டிற்கு வந்த கணேசன் இருவரையும் கோபமாக திட்டி விட்டு டிவியின் ரிமோட்டை உடைத்துள்ளார். இதனால் மன உளைச்சலடைந்த மேகலா வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இதனைப்பார்த்த கணேசன் தனது மகளை காப்பாற்ற கிணற்றிற்குள் குதித்தார். ஆனால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via