பொள்ளாச்சியில் பயங்கர தீ விபத்து
பொள்ளாச்சி அருகே உள்ள கெடிமேடு பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் இவருக்கு சொந்தமான இடத்தில் உடுமலை பகுதியைச் சேர்ந்த விஷ்ணுகுமார் என்பவர் பழைய காட்டன் துணிகளில் இருந்து நூல் எடுக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார் இன்று மாலை ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென குவித்து வைக்கப்பட்டிருந்த துணிகளில் தீப்பிடித்து மளமளவென எரிந்தது
அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீனைப்புதுறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த பொள்ளாச்சி மற்றும் உடுமலைப்பேட்டையில் இருந்து சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் பலட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக தெரியவந்துள்ளது.மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து தீயணைப்பு துறை மற்றும் கோமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :