அரசு அனுமதியின்றி இயங்கிய மதுக்கூடங்களுக்கு சீல்
தஞ்சையில் அரசு அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மாக் பாரில் மது குடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அரசு அனுமதியின்றி செயல்படும் டாஸ்மாக் பாருக்கு சீல் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் அரசு அனுமதியின்றி இயங்கிய 50 மதுக்கூடங்கள் சீல் வைக்கப்பட்டன. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மதுக்கூடங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 121 மதுக்கூடங்கள் அனுமதியின்றி இயங்கி வந்தது தெரியவந்த நிலையில் 104 மதுகூடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Tags :