தமிழ்நாட்டில் 55, 982 சிம் கார்டுகள் முடக்கம்

by Staff / 26-05-2023 04:20:02pm
தமிழ்நாட்டில் 55, 982 சிம் கார்டுகள் முடக்கம்

தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் வழங்கப்பட்ட 55, 982 சிம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுமேலும் போலி ஆவணங்களை பெற்றுக்கொண்டு சிம் கார்டுகளை வழங்கிய 5 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம், கடலூர், கோவை, சேலம், திருச்சி, தஞ்சை, நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இது குறித்து வழக்குகள் பதிவாகியுள்ளது.தற்போது வரை இது தொடர்பாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்திருக்கின்றனர். இதுவரை 55, 982 சிம் கார்டுகளை அவர்கள் முடக்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து போலி சிம் கார்டுகளை விற்பனை செய்யும் நபர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via