கரூர் சம்பவம் - ஜெயக்குமார் கண்டனம்
அரசியல்வாதியோ, நடிகரோ வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எல்லாரும் ஒன்று தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் வீடுகளில் சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடிகளை திமுகவினர் உடைத்ததாக தகவல் பரவியது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “வருமான வரித்துறை தனது கடமையை செய்கிறது. சோதனை செய்யவிடாமல் தடுப்பது அரசமைப்பு விதிமீறல். செந்தில்பாலாஜி சட்டத்திற்கு அப்பாற்பட்டவரல்ல. அரசியல்வாதியோ, நடிகரோ ஐடி அதிகாரிகளுக்கு எல்லாரும் ஒன்று தான்” என தெரிவித்துள்ளார்.
Tags :