பெண் ஊராட்சிமன்றத்தலைவர் தீக்குளித்து தற்கொலை.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சுமதி. இவரது கணவர் குணசேகரன். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட சண்டையால் மனமுடைந்த சுமதி நேற்று மாலை வீட்டில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற குணசேகரனும் படுகாயம் அடைந்தார். இருவரும் மீட்கப்பட்டு கும்பகோணம் ஜிஹெச்சில் சிகிச்சை பெற்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :