மதுபான கூடத்தில் இரு வாலிபர்கள் இடையே ஏற்பட்ட மோதலில்  ஒருவர் கழுத்து அறுத்து கொலை.

by Editor / 29-05-2023 08:11:29am
 மதுபான கூடத்தில் இரு வாலிபர்கள் இடையே ஏற்பட்ட மோதலில்  ஒருவர் கழுத்து அறுத்து கொலை.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான அரசு மதுபான பாரில் நேற்று இரவு 9 மணி அளவில் இரண்டு வாலிபர்கள்  அதிக அளவில் மது அருந்தி வாக்குவாதம் செய்து கொண்டு இருந்துள்ளனர். இந்நிலையில் திடீரென்று ஒரு வாலிபர் மற்றொரு வாலிபர் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்கிறது அதன் பின் அங்கு வந்த ஒட்டன்சத்திரம் காவல் துறையினர் அங்கு உயிருக்கு போராடிகொண்டடிருந்த வாலிபரை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்த வாலிபர் குறித்து பார்க்கும்போது இறந்தவர் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த புலிக்குத்தி கிராமம் சுப்பையா என்பவருடைய மகன் முருகேஷ்வரன் வயது 32 என்பது தெரியவந்தது. மேலும் இவருடன்  மது அருந்தி வந்த வாலிபர் ஒட்டன்சத்திரம் காந்தி நகரைச் சேர்ந்த பெருமாள் மகன் சுபாஷ் என்பதும் இவர்கள் இருவரும்  மது அருந்தி வந்ததும் தெரியவந்துள்ளது சுபாஷ் என்போர் மீது பல வழக்குகள் அவர் மீது இருப்பதாகவும் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ஜாமுனில் வெளியே வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,இது குறித்து ஒட்டன்சத்திரம் காவல்துறை நகர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via