விபத்தின் பின்னணியில் சதி? - மம்தா பானர்ஜி கருத்து

by Staff / 03-06-2023 02:08:11pm
விபத்தின் பின்னணியில் சதி? - மம்தா பானர்ஜி கருத்து

ஒடிசாவில் கோரமண்டல் ரயில் விபத்து குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பரபரப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்த விபத்தின் பின்னணியில் ஏதாவது சதி இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார். இந்த விபத்தில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஏராளமான பயணிகள் உயிரிழந்தனர். சிறிது நேரத்திற்கு முன்பு ஒடிசா சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி காயமடைந்தவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இந்த விபத்தில் இதுவரை 278 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via