5½ லட்சம் குட்கா பறிமுதல்

by Staff / 04-06-2023 03:03:44pm
 5½ லட்சம் குட்கா பறிமுதல்

ஓமலூரை அடுத்த காமலாபுரம் பிரிவு ரோடு அருகே பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராஜஸ்தான் ஜோத்பூர் பகுதியை சேர்ந்த சங்கர் சிங் ஜாட்வால் மகன் மான்சிங் (வயது 34).இவர், கடந்த 12 ஆண்டுகளாக ராஜஸ்தானி என்ற பெயரில் தாபா ஓட்டல் நடத்தி வருகிறார். இவர், பெங்களூருவில் இருந்து 3 காரில் சேலத்திற்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வருவதாக ஓமலூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் காமலாபுரம் பிரிவு ரோடு அருகே உள்ள ராஜஸ்தானி ஓட்டல் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் ஒரு கார் மின்னல் வேகத்தில் தப்பி சென்றது. 2 காரை போலீசார் மடக்கி பிடித்தனர்.அந்த காரை சோதனை செய்த போது அதில் மூட்டை, மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அந்த 2 காரையும் பறிமுதல் செய்தனர். பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு குட்கா கடத்தி வரப்பட்டது தொடர்பாக தாபா ஓட்டல் உரிமையாளர் மான்சிங்கை கைது செய்தனர். கடத்தி வரப்பட்ட ரூ. 5½ லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரூ. 9 லட்சம் மதிப்பிலான 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Tags :

Share via