தமிழ்நாடு ஆளுநருக்கு கருப்பு கொடி காண்பித்த 300 பேர் கைது.

by Editor / 28-06-2023 02:06:22pm
தமிழ்நாடு ஆளுநருக்கு கருப்பு கொடி காண்பித்த 300 பேர் கைது. தமிழ்நாடு ஆளுநருக்கு கருப்பு கொடி<br /> சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் .என். ரவி கலந்து கொள்ள கார் மூலம் கோவையில் இருந்து சேலம் வந்தார். சேலம் கருப்பூர் பகுதியில் உள்ள அரசு பொறியியற் கல்லூரி அருகே தமிழ்நாடு ஆளுநருக்கு பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கருப்புக்கொடி காட்டினர். &nbsp;இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி தலைமையிலான போலீசார் 300 பேரை கைது செய்தனர்.பின்னர் அனைவரும் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.<br /> &nbsp;
 

Tags :

Share via