தீபாவளிக்கு முன் ஏற்ற வேண்டிய தீபம்-

by Admin / 10-11-2023 06:22:18pm
தீபாவளிக்கு முன் ஏற்ற வேண்டிய தீபம்-

யம தீபம்!*

 

*தீபாவளிக்கு முன் யம தீபம் ஏன் ஏற்ற வேண்டும் ? எப்படி ஏற்ற வேண்டும்?*

*தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவது நம் மரபு. யம தீபம் ஏற்றினால், குடும்பம் விருத்தியாகும்.. தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். அனைத்து விதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும்*

*ஐப்பசி மாதத்தில் தேய்பிறை திரயோதசி அன்று பிரதோஷ வேளையில் வீட்டிற்கு வெளியில் தென்திசை நோக்கி வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப (குறைந்தது ஐந்து) நல்லெண்ணெய் தீபத்தை தெற்கு நோக்கி ஏற்றி வழிபட வேண்டும். இதனால் வீட்டில் உள்ளவர்கள் நோய்கள் நீங்கி ஆரோக்கியமாக வாழ்வர்.*

*யம தீபம்*

*யம தீபமானது துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. அவர்கள் பிரச்சினைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, நலன்களைச் செய்வார்கள்.*

*தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவது நம் மரபு. யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும், சொத்துகள் சேரும். அனைத்து விதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும். மஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு நமது முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மஹாளய அமாவாசை அன்று திதி கொடுக்கிறோம். அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே. அந்த தீபத்தை தீபாவளி காலத்தில் வருகிற திரயோதசி திதியில் ஏற்ற வேண்டும்.*

*யம தீபம் ஏற்றும் முறை*

*வீட்டின் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். தெற்கு திசை நோக்கி விளக்கு எரிய வேண்டும். விளக்கேற்றிய பின்னர், உங்கள் முன்னோரை மனதில் ஓரிரு நிமிடங்கள் சிந்திக்க வேண்டும். இந்த தீபத்தை வீட்டின் வாசலில் நிலை வாசல்படியில் ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்ற பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தையுமே வீட்டிற்குள் மீண்டும் எடுத்து சென்று பயன்படுத்தக் கூடாது.*

*வட மாநிலங்களில் கோதுமை மாவால் செய்யப்பட்ட விளக்குகளை ஏற்றுவார்கள். ஆனா அகல் விளக்கில் ஏற்றினாலே போதுமானது. விளக்கும் ஏற்றும் போது பின்புறமாக நின்று தான் ஏற்ற வேண்டும். மற்றவர்களும் விளக்கிற்கு முன்புறம் நிற்கக் கூடாது. விளக்கை எடுப்பதாக இருந்தாலும் பின்புறம் இருந்தே எடுக்க வேண்டும். விளக்கை தானாக அணைய விட வேண்டும். தீபாவளிக்கு முதல் நாளை மாலை 5.45 மணி முதல் ஒரு மணி நேரம் எரிந்தால் போதும்.*

*யமத்துவிதியை*

*ஐப்பசி மாத வளர்பிறை துவிதியை யமத் துவிதியை என்றழைக்கப்படுகிறது. யமத் துவிதியை அன்றுதான் யமதர்மராஜன் தனது சகோதரி வீட்டிற்கு சென்று உணவருந்தி சகோதரியை ஆசீர்வதித்த நாளாகும். எனவே அன்றைய தினம் சகோதரர்கள் சகோதரிகளின் வீட்டிற்குச் சென்று உணவருந்தி பரிசுப்பொருட்களைப் பரிமாறி சகோதரியை ஆசீர்வாதம் செய்ய வேண்டும். இன்று சகோதரன் சகோதரியின் அழைப்பின் பேரில் சகோதரியின் வீட்டிற்கு சென்று வாழை இலையில் உணவு அருந்தி பரிசுகளைப் பரிமாறிக் கொண்டு அசீர்வாதம் செய்தால் சகோதர சகோதரிகளின் அன்பு என்றும் நிலைத்திருக்கும். மேலும் சகோதரனுக்கு தீர்க்காயுளும் சகோதரிக்கு தீர்க்காயுளுடன் தீர்க்க சுமங்கலி யோகமும் உண்டாகும் என எமதர்மராஜன் கூறுகிறார்.*

*சொல்ல வேண்டிய ஸ்லோகம்:*

*ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய*

*ம்ருத்யவே சாந்த காயச*

*வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச*

*ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே!*

*வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:*

*சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:*

*யாரெல்லாம் யமதீபத்தை ஏற்றக்கூடாது*

*இந்த தீபத்தை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஏற்றலாம். கர்ப்பிணிகள், உடலில் வலி உள்ளவர்கள், நோய் உள்ளவர்கள், காயம் உள்ளவர்கள், புதிதாக திருமணமானவர்கள் கண்டிப்பாக ஏற்றக் கூடாது.*

 

தீபாவளிக்கு முன் ஏற்ற வேண்டிய தீபம்-
 

Tags :

Share via