மாரடைப்பு ஏற்பட்டு 8ஆம் வகுப்பு மாணவன் மரணம்
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த போது மாணவன் சுருண்டு விழுந்தான். அப்போது உடனே அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. மயக்கமாக இருந்த போது தண்ணீர் கொடுக்கப்பட்டதாகவும், ஆனாலும் மாணவன் உடல் அசைவின்றி கிடந்ததாக போலீசாரிடம் ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :