நடிகரின் மனைவி சந்தேகத்திற்கிடமான முறையில் மரணம்
மலையாள நடிகர் உல்லாஸ் பந்தளம் என்பவரின் மனைவி ஆஷா சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். இவர் செவ்வாய்க்கிழமை காலை கேரளாவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் மகனுக்கும் மருமகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகளோ, சண்டை சச்சரவுகளோ இல்லை என்று உல்லாஸின் மாமனார் தெரிவித்துள்ளார். வேறு காரணங்களுக்காக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறினார். சம்பவம் நடந்த போது உல்லாஸ் வீட்டில் இருந்ததாக தெரிகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :