கழிவறை ஜன்னல் வழியாக தப்பிய குற்றவாளி

by Staff / 20-12-2022 04:14:49pm
கழிவறை ஜன்னல் வழியாக தப்பிய குற்றவாளி

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் போலீஸ் பிடியில் இருந்து குற்றவாளி ஒருவர் தப்பியோடினார். மொயின்புரி மாவட்டத்தில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 19 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மருத்துவப் பரிசோதனைக்காக நொய்டாவில் உள்ள மருத்துவமனைக்கு அவர் திங்கள்கிழமை அழைத்துச் செல்லப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் கழிவறைக்கு செல்வதாக போலீசாரிடம் கூறிவிட்டு, மருத்துவமனை கழிவறை ஜன்னல் வழியாக குதித்து தப்பினார்.அலட்சியமாக செயல்பட்ட இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளியை தேடி வருவதாகவும் கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் (நொய்டா) அசுதோஷ் திவேதி தெரிவித்தார்.

 

Tags :

Share via