புது தம்பதியர் கொலை வழக்கில் மூன்று பேர் மீது வழக்கு பதிவு.

by Staff / 03-11-2023 04:12:09pm
புது தம்பதியர் கொலை வழக்கில் மூன்று பேர் மீது வழக்கு பதிவு.

தூத்துக்குடி முருகேசன் நகரில் காதல் திருமணம் செய்த புது மணத்தம்பதி கார்த்திகா- மாரி செல்வம் நேற்று மாலை மர்ம கும்ப கும்பல்களால் படுகொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் வந்து பார்வையிட்டு குற்றவாளியை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில் இந்த கொலையில் கார்த்திகா தந்தை முத்துராமலிங்கம் மற்றும் உறவினர்கள் கருப்பசாமி, பரத் ஆகிய மூன்று பேர்கள் மீது சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via