கஞ்சா விற்றவர் கைது 1 கிலோ 150 கிராம் கஞ்சா பறிமுதல்

by Staff / 23-10-2023 04:22:44pm
கஞ்சா விற்றவர் கைது 1 கிலோ 150 கிராம் கஞ்சா பறிமுதல்

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வெள்ளமடை ஊராட்சி காளிபாளையம் கிராம பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜா தலைமையில் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.அங்கு சோதனை நடத்திய போது ஆசாமி ஒருவர் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து வாடிக்கையாளருக்கு விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில் அந்த ஆசாமி ஒடிசா மாநிலம் ஜெப ஊக்கான் பகுதியைச் சேர்ந்த 41 வயதான ரஞ்சன் குமார் தாஸ் என்பதும், கடந்த சில மாதங்களாக இந்த தொழிலில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via