மனைவி பிரிந்ததால் விரக்தி ஐசிஎப் ஊழியர் தற்கொலை...

by Staff / 29-12-2023 01:21:12pm
மனைவி பிரிந்ததால் விரக்தி ஐசிஎப் ஊழியர் தற்கொலை...

சென்னை வியாசர்பாடி சுந்தரம் பவர்லைன் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (32). இவர் ஐசிஎப் நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார்.இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திவ்யா என்பவருடன் திருமணமாகி, திவ்யஸ்ரீ (4), திவ்யாசாலா (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த 3 மாதங்களாக திவ்யா மணலியில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மணிமாறன் மீது திவ்யா புகார் அளித்தார். இதனால் நேற்று முன்தினம் மணிமாறன் காவல் நிலையத்திற்குச் சென்று, மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை, என எழுதிக் கொடுத்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.அதன்பிறகு மன உளைச்சலில் இருந்த அவர், வீட்டில் இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் போலீசார் சம்பவத்திற்குச் சென்று மணிமாறன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via