அனைவருக்கும் பேரிழப்பு; ஜி. கே வாசன்
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவு என்பது திரைத்துறை மட்டுமல்லாது அனைவருக்கும் பேரிழப்பு என தமாக தலைவர் ஜி. கே வாசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், அவருக்கென்று தனி ஒரு ரசிகர்கள் என்ற நிலையை ஏற்படுத்தி அதன் மூலம் உயர்ந்த இடத்தை பிடித்து மக்கள் நல பணிகளை செய்து படிபடியாக உயர்ந்தவர்;எல்லோரிடமும் அன்பு செலுத்தி நட்புக்கு இலக்கணமாக செயல்பட்டு வந்தவர்;
மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி மூத்த தலைவர்களோடு மரியாதைக்குரிய தலைவராக பழகியவர்;
ஒரு சிறந்த கலைஞர் உயர்ந்த அரசியல்வாதி இதைத் தாண்டி நல்ல மனிதர் மனித நேயர் இன்று தமிழ் மக்களை விட்டு மறைந்து விட்டார் என்றார்.
Tags :