ஒரே குடும்பத்தில் 5 பேர் வெட்டிக்கொலை

by Staff / 13-12-2022 12:15:14pm
ஒரே குடும்பத்தில் 5 பேர் வெட்டிக்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே காஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி வள்ளி. இவருக்கு திரிஷா, மோனிஷா, மகாலட்சுமி என்னும் 3 மகள்களும், சக்தி என்னும் ஒரு மகனும் உள்ளனர். பழனி இன்று காலை தனது மனைவி மற்றும் பிள்ளைகளை வெட்டி கொலை செய்தார். பின்னர் தானும் தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via