ஜாதிவாரி கணக்கெடுப்பு...பாமகவினர் வெளிநடப்பு .... முதல்வர் விளக்கம்
சட்டப்பேரவையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாததை கண்டித்தும், 10.5 விழுகாடு வன்னியர் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாதை கண்டித்தும் பாமகவினர் வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், "ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக அவையில் பலமுறை பேசப்பட்டு உள்ளது. பட்ஜெட்டிலும் அது குறித்து குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சட்டமன்றத்திலும் பதிலளித்துளோம். அதையும் தாண்டி பாமகவின் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், வேல்முருகன் ஆகியோரை நேரில் அழைத்தும் விளக்கமளித்துள்ளோம். இவ்வளவு விளக்கத்திற்கு பிறகும் நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு எதுவும் சொல்லுவதற்கு இல்லை என கூறியுள்ளார்.
Tags :