மாணவிக்கு பாலியல் தொல்லை - பேராசிரியர் மீது போக்சோ வழக்கு

by Staff / 30-04-2023 12:33:33pm
மாணவிக்கு பாலியல் தொல்லை - பேராசிரியர் மீது போக்சோ வழக்கு

நாமக்கல் ராசிபுரம் அருகே உள்ள கூனவேலம்பட்டி புதூரைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 56). இவர் ராசிபுரம் அருகே ஆண்டகளூர்கேட்டில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் இயற்பியல் துறை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மாணவிகளிடம் சில்மிஷம் செய்வதும், இரட்டை அர்த்தத்தில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அதே கல்லூரியில் பயிலும் 17 வயது மாணவிக்கு பேராசிரியர் சுந்தரமூர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததாகராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள பேராசிரியரை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via