சுகாதாரக் கேடு - பேக்கரிக்கு அதிரடியாக சீல் வைப்பு

by Staff / 07-10-2023 02:56:59pm
சுகாதாரக் கேடு - பேக்கரிக்கு அதிரடியாக சீல் வைப்பு

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் உள்ள பேக்கரியில் பப்ஸ் வாங்கி சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அந்த பேக்கரிக்கு மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் சீல் வைத்துள்ளார். மேலும், சுகாதாரமற்ற முறையில் இருந்த பப்ஸ், கேக், பிரட் உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளனர். உடல்நலக்குறைவு ஏற்பட்ட 3 குழந்தைகளும் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via