மகளுக்கு பாலியல் தொல்லை - தந்தை கைது
புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் சித்துபட்டியை சேர்ந்த வெல்டிங் பட்டறை தொழிலாளியான கதிரவன்(36) என்பவர் 9-ம் வகுப்பு பயிலும் தனது 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில், அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், ஆசிரியரிடம் இது குறித்து மாணவி கூறிய நிலையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தில் ஆசிரியர் புகார் அளித்துள்ளார்.
Tags :