கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தம்.

by Editor / 01-09-2023 09:05:00am
கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தம்.

நெல்லை மாவட்டம்  கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதலாவது அணு உலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி இன்று நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் முதலாவது அணு உலையில் கடந்த மாதம் 20ஆம் தேதி டர்பைன் பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு நேற்று முன்தினம் 30 ஆம் தேதி மீண்டும் மின் உற்பத்தி துவங்கிய நிலையில் மீண்டும் பழுது காரணமாக இன்று காலை மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.ஆயிரம் மெகாவாட்  மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணிகளில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இப்பணிகள் நிறைவுற்றபின் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. 

 

Tags : கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தம்.

Share via