மாமன்னர் புலிதேவனின் உடைய 308-வது பிறந்த நாள் விழா.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டான் செவல் கிராமத்தில் சுதந்திரபோராட்ட வீரர்.மாமன்னர் புலிதேவனின் உடைய 308-வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்சன் தலைமையில் 5 ஏடிஎஸ்பிக்கள் 15 டிஎஸ்பிக்கள்,25 ஆய்வாளர்கள் மற்றும் 100 மேற்பட்ட உதவி ஆய்வாளர்கள்,1540 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.ஏழு சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.இன்று காலை 10 மணிமுதல் அரசின் சார்பில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன்,தங்கம் தென்னரசு,மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் மாமன்னர் புலிதேவனின் வாரிசுதாரர்கள்,உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு தொடங்குகிறது.அதன்பின்னர் அதிமுகவினர்,ஓபிஎஸ் அணியினர்,அமமுகவினர்,பாஜகவினர், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்,பல்வேறு அமைப்பைச்சார்ந்தவர்கள்மாலைஅணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.
Tags : மாமன்னர் புலிதேவனின் உடைய 308-வது பிறந்த நாள் விழா.