கோட்டாட்சியரை பணியிடம் மாற்றம் செய்யக்கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

by Editor / 10-05-2023 08:49:04pm
கோட்டாட்சியரை பணியிடம் மாற்றம் செய்யக்கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கிராம நிர்வாக அலுவலர்களை ஒருமையில் பேசிய கோவில்பட்டி கோட்டாட்சியர் ஆடியோ சமூக வலைதளத்தில் வைரல் -
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வருவாய் உட்கோட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகளின் விவரங்களை ஆதார் அட்டை வங்கி கணக்கு விவரங்களை கணினியில் பதிவேற்றும் படியாக வாய்மொழி உத்தரவு இடப்பட்டதாக தெரிய வருகிறது.இப்பணியை கிராம நிர்வாக அலுவலர்கள்  சரிவர செய்யவில்லை எனவே கோப்புகளில் கையெழுத்திட மாட்டேன் எனவும், கோவில்பட்டி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட சில தாலுகா அலுவலகங்கள் மோசமாக செயல்படுவதாகவும் கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த ஆடியோவில் கூறினார்.
இதுகுறித்து  கிராம நிர்வாக அலுவலர்களை ஒருமையில் பேசியதாகவும் கூறி அவரது ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
இந்நிலையில் இன்று இதனை கண்டிக்கும் விதமாக கோவில்பட்டி இ எஸ் ஐ மருத்துவமனை முன்பாக கோவில்பட்டி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் பணி புரியும் 150 க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கோட்டாட்சியரை பணியிடம் மாற்றம் செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் கோட்டாட்சியரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

 

Tags :

Share via