மோசமான வானிலையால் நடுவழியில் நின்ற ரோப்கர்

by Staff / 24-05-2022 11:48:44am
மோசமான  வானிலையால் நடுவழியில் நின்ற ரோப்கர்

மத்திய  பிரதேச மாநிலத்தில் மோசமான வானிலையால் ரோப் காரில் பயணித்த பக்தர்கள் அந்தரத்தில் சிக்கித் தவித்தனர். சட்னா மாவட்டத்திலுள்ள சாரதா தேவி கோவில் மலை உச்சியில் அமைந்துள்ளது இக்கோவிலுக்கு சென்ற பக்தர்கள் ரோப் காரில் பயணித்தனர் மோசமான வானிலை முன்னறிவிப்பு இருந்தபோதிலும்ரோப் காரில்சேவை தொடர்ந்தாக  கூறப்படுகிறது.இந்த நிலையில் மழையுடன் கூடிய புழுதிப் புயலால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ரோப்கார் நடுவானில் நிறுத்தப்பட்டது.அதிர்ஷ்டாவசமாக  இந்த சம்பவத்தில் அசம்பாவிதம் ஏதும் நிகழாத நிலையில் மின் வினியோகம் செய்யப்பட்டு பக்தர்கள் மீட்கப்பட்டனர்.

 

Tags :

Share via